Friday, August 25, 2023

ANNANAGAR Chalo

சிவபெருமானின் திருக்கோலங்களை 25 திருமூர்த்தங்களாகப் பெரியோர் கூறுவர். அவற்றில் சந்திரமௌலீஸ்வரர் எனும் திரு மூர்த்தமும் ஒன்றாகும். காஞ்சி மகாபெரியவர் அண்ணாநகரில் பக்தர்கள் வழிபட்ட சிவலிங்கத் திற்கு சந்திரமௌலீஸ்வரர் எனப் பெயரிட்டார். திரிபுரசுந்தரி என்ற பெயரால் அம்பாளுக்குச் சந்நிதி அமைக்கவும், பரிவார தெய்வங்களுக்கு சந்நிதிகள் அமைத்து வழிபடவும் அறிவுரை தந்து ஆசி வழங்கினார். அவர் வழிகாட்டியபடி நவகிரகங்கள், துவார முருகர், விநாயகர், ஐயப்பன் மற்றும் சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. அங்கு வசிக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து 1978-ல் சந்திரமௌலீஸ்வரருக்கு கும்பாபிஷேகத்தையும் நடத்தினர். பின் பக்தர் கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் விநாயகர், வள்ளி, தெய்வானை, ஆஞ்சனேயர், கால பைரவர், சிவகாமி உடனுறை உற்சவர் (நடராஜர்), கொடி மரம் முதலானவை சிறப் பான முறையில் அமைக்கப்பட்டன. 1996-ஆம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடந்தது,42 அடி உயரத்தில் புதிதாக ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 28-1-2007-ல் கும்பாபிஷேகம் நடந்தது. I wasluckey to visit this temple to day

No comments:

Post a Comment